வேலூர்: கொரோனா பாதிப்பால் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைத்தாலும் வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் வாலிபர்கள் ஆர்வத்துடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.