மூணாறு: மூணாறில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் காட்டுயானைகள் சகஜமாக ஊருக்குள் புகுந்து நடமாடுகின்றன.கேரள மாநிலம், மூணாறில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முக்கிய பகுதிகள் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக கிடக்கின்றன. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்து சுதந்திரமாக உலா வரத் துவங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டுயானை மூணாறு காலனி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கிருந்த வாழை மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டு சென்றது. இதே யானை நேற்று முன்தினம் இரவு மூணாறு அந்தோணியார் காலனி பகுதியில் புகுந்தது.