திருவில்லிபுத்தூர்1: ஊரடங்கது உத்தரவு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், திருவில்லிபுத்தூர் பால்கோவா தொழில் முடங்கிப் போயுள்ளது. இதனால் பால்கோவா தயாரிப்பவர்கள் பல லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான் அனைவரின் ஞாபகத்துக்கு வரும். தனித்துவம் வாய்ந்த, ருசி மிகுந்த திருவில்லிபுத்தூர் பால்கோவா தொழில், ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதால் முடங்கிப் போயுள்ளது. இம்மாவட்டத்தில் சிவகாசியில் பட்டாசு தொழில் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு திருவில்லிபுத்தூரில் பால்கோவா தொழில் ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது.