குன்னூர்: குன்னூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலைப்பாதையில் வாகனங்கள் இயங்காததால் சாலையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் இல்லாமல் அமைதியான சூழல் நிலவிவருகிறது. இதனால் சாலை ஓரங்களில் ஏறாளமான குரங்குகள் உணவின்றி தவித்து வருகிறது. இதே போன்று காட்டெருமைகளும் சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.