உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சூறைக்காற்றில் மின்கம்பி உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. உத்திரமேரூர் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தவேளையில், நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன், கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு பயிரிட்டு, அறுவடைக்கு தயாராக இருந்தது.