ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு வரை திறந்து வைத்திருந்த, 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக, 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடை ஆகியவைகள் பிற்பகல் 1 மணி வரை நடத்தி கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி மற்றும் தாராட்சி பகுதிகளில் இரவு 8 மணி வரை மளிகை கடைகள் இயங்கி வருவதாக திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதுபோன்று விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.