உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஷசாங்க் தியோ சுதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், ‘கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இப்பரிசோதனைகளை மக்களுக்கு இலவசமாக கிடைக்க செய்ய வேண்டும். கொரோனா அதிகரித்தும் வரும் நிலையில், பாதிககப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய தகவல்களை நாடு முழுவதும் தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ் ரவீந்திர பாட் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, ‘118 ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு 15,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.