கொரோனா வைரஸ் பாதிப்பினால் லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை தேறி வருகிறார். இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எட்வர்ட் ஆர்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய போது, ``பிரதமரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. ஊரடங்கை தளர்த்துவது குறித்து திட்டமிட வரும் திங்கள்கிழமை கூட்டம் நடத்தப்பட இருந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.’’ என்று கூறியுள்ளார்.