கொரோனா வைரஸின் தீவிரத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாகனங்களில் உலா : திண்டுக்கல்லில் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளிலும் நடமாடுவதும், கூட்டமாக சேருவதும் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

Related Stories: