புதுடெல்லி: பொது இடங்களில் புகையிலையை உட்கொண்டு எச்சிலை துப்பக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் மற்றும் பிற மெல்லும் புகையிலை பொருட்கள், அர்கா நட் ஆகியவற்றை சாப்பிட்டால் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகும். அதனை உட்கொள்ளும் சிலர், தொடர்ந்து பொது இடங்களில் துப்பி வருகின்றனர். ஆனால், அவ்வாறு புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி துப்ப வேண்டாம் என்று, உலக சுகாதார ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.