நாகை: வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஒலி பெருக்கி மூலம் நாகையில் உள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகையில் 5 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாகையை அடுத்துள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மக்கள் யாரும் நாகை கடைத்தெரு மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
வெளிநாடு, வெளிமாநிலம் சென்று திரும்பியோர் வீட்டை விட்டு வெளியே வந்தால் 50,000 அபராதம்: நாகையில் 3 கிராம மீனவர்களுக்கு எச்சரிக்கை
- வெளிநாட்டவர்கள்
- வீட்டில்
- மீளத்திரும்பியோர்
- வீட்டில்
- நாக அவே
- கிராமம்
- நாகப்பட்டினம் மீனவர்கள் எச்சரிக்கை