வேலூர்: கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அசட்டு துணிச்சலுடன் செயல்படுவதாகவும், முழுமையான அளவில் வீதிகளில் காவல்துறை ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்தும், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், சாலைகளில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் தொடர்ந்து வருகிறது.