திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் விஜயகுமாரி, ஆணையர் சந்தானம், போலீஸ் டிஎஸ்பி கங்காதரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் முன்னாள் நகரமன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், நேசன், லயன் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது திருவள்ளூரில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம், அமைச்சர் கேட்டறிந்தார்.