ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ஊரடங்கின்போது பிறந்த இரட்டையர்களுக்கு கோவிட், கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரேனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி காலை உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து ராய்ப்பூரில் தங்கியுள்ள பிரீத்தி வர்மா என்ற 27 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களில் ஆண் குழந்தைக்கு `கோவிட்’ என்றும், பெண் குழந்தைக்கு `கொரோனா’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாய் பிரீத்தி வர்மா கூறுகையில், `‘கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த வாகன போக்குவரத்தும் இல்லாத நிலையில், அரசு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.