குவைத்: கொரோனா அச்சம் காரணமாக விசா இல்லாமல் குவைத்தில் வேலை செய்யபவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க குவைத் மன்னர் முடிவு செய்துள்ளார். அரசே விமான டிக்கெட் எடுத்து அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அந்தந்த நாட்டின் தூதர்களை அணுகலாம் எனவும் அறிவித்துள்ளது.