வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். மேலும் கொரோனா வைரஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைக் குறிக்க ஒரு மெழுகுவர்த்தி, அல்லது மொபைலின் ஒளிரும் விளக்கை ஏற்றி வைக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள் எனவும், இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது என கூறினார்.

Related Stories: