ஓட்டலில் `கொரோனா’ மிரட்டல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜஷ்விந்தர் சிங் மஹர் சிங் (52). இவர் பொதுமக்களை தாக்குவது உள்ளிட்ட குற்றங்களை செய்ததற்காக சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில், அவரை சமீபத்தில் விடுதலை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 26ம் தேதி வரை எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என எச்சரித்தது.  இதை தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு நடந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்து, எச்சிலை துப்பி, `கொரோனா... கொரோனா...’ என சத்தம் போட்டுவிட்டுதப்ப முயன்றார். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவரை, 55 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

Related Stories: