வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 8 பேரை தனிமைப்படுத்தி, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உள்ளதா? என வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நேற்று முன்தினம் கணக்கெடுக்க சென்ற அலுவலர்களை, அங்குள்ள சிலர் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.