புதுடெல்லி: டெல்லியில் மதவழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அந்த நிகழ்ச்சி நடந்த பகுதியை போலீசார் சீல் வைத்துள்ளனர். கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி தெரிந்துள்ளது.