புதுடெல்லி: தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியதால் மன ரீதியாக சோர்வடைந்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, கொரோனா அச்சுறுத்தலால் கிடைத்திருக்கும் இந்த கட்டாய ஓய்வு நல்லதுதான் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இப்போது கிடைத்திருக்கும் கட்டாய ஓய்வு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மோசமானதல்ல. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முடிவில் ஏற்பட்ட மனச்சோர்வு, காயத்தை சரிசெய்து கொள்ளலாம். கடந்த 10 மாதங்களில் நிறைய போட்டிகளில் விளையாடி விட்டோம். உலக கோப்பை போட்டிக்காக கடந்த ஆண்டு மே23ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டோம்.