ஊரடங்கு அமலில் இருந்தாலும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். எனினும் லைசென்ஸ் பெற்ற மதுக்கடைகளை தினசரி மாலை சில மணிநேரமாவது திறந்து வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்படி நான் கூறுவதால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். ஊரடங்கால் வீட்டில் அடைந்து கிடப்பவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.