மும்பை: கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்கான அவசர தேவைகளுக்கு நிதி வழங்குவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சூழலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66-லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்துள்ள இந்த சூழலில், மக்களுக்கு உதவும் வகையில் டாடா குழுமம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளைச் செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது குழும தலைவர் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;