சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது அவர் வரும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் வட அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வேளையில், தன் பயணத்தில் மாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் இசையை உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை விட முக்கியமான வேலை எதுவும் எனக்கு கிடையாது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாம் நம் குடும்பத்துடன் வீட்டில் தனித்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.