புதுடெல்லி: ‘இனியும் காத்திருக்காமல் அடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல் போட்டிகளை நடத்த இப்போதே திட்டமிட வேண்டும்’ என்று நட்சத்திர வீராங–்கனை மிதாலி ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் நேற்று, ‘அடுத்த ஆண்டுக்குள் பெண்கள் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும். அதற்காக பிசிசிஐ இனியும் காத்திருக்காமல் உடனடியாக திட்டமிட வேண்டும். இது என் தனிப்பட்ட கோரிக்கை. ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் ேபாலில்லாமல், பெண்கள் ஐபிஎல் அணிகளில் வெளிநாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கையை 4லிருந்து 6ஆக அதிகரிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.