மாஸ்கோ: உலகை தன் கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவின் அச்சுறுத்தலினால் ரஷ்யாவில் 3 பேர் பலியான நிலையில், ஏறக்குறைய 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவில், `‘கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவு (நேற்று) முதல் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்படுகிறது. இதில் இருந்து அரசு விமானங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிகள் உள்நாட்டு விமான சேவைக்கு பொருந்தாது.