பாகிஸ்தானில் கொரோனாவால் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக, பஞ்சாப் மாகாணத்தில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கியமான மாகாணங்களில் ஒன்றான பஞ்சாப்பில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு, ராணுவ பயிற்சி முகாம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், பஞ்சாப்பில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு ராணுவம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.பஞ்சாப்பில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் ஆடு, மாடுகளை போல் கும்பல் கும்பலாக ராணுவ வாகனத்தில் அடைத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர், முசாபராபாத் மற்றும் பலுசிஸ்தானின் கில்ஜித் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றி வருகிறது.