அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகளுடன் கூடிய ஓமந்தூரார் மருத்துவமனை வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்காக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் முக கவசங்கள் தயாரிக்க படுகின்றன.

Related Stories: