புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவையில் 90 சதவீதமும், மாநிலங்களவையில் 74 சதவீதமும் அலுவல் முடிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3ம் தேதி பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இம்மாதம் 2ம் தேதி தொடங்கி நடந்த அவை கூட்டம், வைரஸ் பரவல் காரணமாக, கடந்த திங்கட்கிழமை இரு வாரங்களுக்கு முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒன்பது அமர்வுகள் இருந்தன. இரண்டாவது கட்டத்தில் இரண்டிலும் 14 அமர்வுகள் இருந்தது.