டோக்கியோ: கொரோனா பீதி அதிகரித்து வரும் சூழலில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதாக ஜப்பான் பிரதமர் அபே அறிவித்துள்ளார். இந்த ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குவதாக இருந்தது. அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விளையாட்டு அரங்கங்கள், சாலைகள், விடுதிகள் என ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தன.