அமெரிக்காவில் பலி 419

வாஷிங்டன்: கடந்த  ஞாயிறுக்கிழமை நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில்  இத்தாலி, ஈரான் வரிசையில் 6வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 419 பேர்  பலியாகி உள்ளனர். ஏறக்குறைய 34,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனிடையே  நியூயார்க், கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வைரஸ்  பரவல் அதிகமாக இருப்பதாகவும் நியூயார்க்கில் 15,000 பேருக்கு வைரஸ் தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனாவைக்  கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்களுக்கு இன்னும் 10 நாட்களில் அங்கு  கடும் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

Related Stories: