புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரசு மருத்துவர்களைக் கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனைகளை நடத்திவந்த தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் (நாடா), தற்போது ஊக்கமருந்து சோதனையை ஒத்திவைக்கவுள்ளதாகத் தகவலளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ‘நாடா’ அமைப்பின் முதன்மை நிர்வாக மேலாளர் நவின் அகர்வால் கூறுகையில், ‘‘தற்சமயம் அரசு மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாகப் பொதுமக்களுக்கு மருத்துவம் அளித்துவருவதால், ‘நாடா’ தனது ஊக்கமருந்து பரிசோதனைகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் மிகவும் முக்கியமான ஊக்கமருந்து சோதனைகளுக்கு மட்டும் மருத்துவர்களை நாடவுள்ளோம்.