கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி: கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஹோவில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுச்சேரியிலும் 144 தடை அமலாகிறது. காலை 7 முதல் 9 மணி வரையிலும், மாலை 6-9 மணி வரை பொருட்கள் வாங்கி கொள்ளலாம். நாளை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: