சென்னை: சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தூக்கி வீசிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேட்டுக்குப்பம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு 11 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அச்சமயம் அப்பகுதியில் வசிக்கக்கூடிய சுரேஷ் என்ற வாலிபர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் உடலை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார். தொடர்ந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்குள் வராததால் அவரது பெற்றோர் சந்தேகமடைந்து தேடியுள்ளனர். அக்கம் பக்கத்தில் விசாரித்தும் மகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்றதும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.