சென்னை: சட்டப்பேரவையில் நேற்று திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) பேசியதாவது: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில், குடிநீரோடு, கழிவுநீர் கலப்பதென்பது கடந்த 6 மாத காலமாக பெரும் பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. எனவே, எனது தொகுதியில் இருக்கிற பழைய குடிநீர்க் குழாய்களையும் அதேபோல கழிவுநீர் கால்வாய்களையும் அகற்றிவிட்டு, புதிதாக அமைத்துத்தர வேண்டுகிறேன். வார்டு எண் 74ல் அமைந்திருக்கிற மூலிகை பூங்கா, வார்டு எண் 70ல் அமைந்திருக்கிற முரசொலிமாறன் பூங்கா, வார்டு எண் 76ல் அமைந்திருக்கிற கலைஞர் பூங்கா இவையெல்லாம் பராமரிப்பின்றி, சிதிலமடைந்திருக்கிற சூழ்நிலையில் இருக்கிறது. அவற்றையும் சீர்படுத்தித் தர வேண்டுகிறேன்.