புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், தங்கள் கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணமதிப்பு நீக்கம், பொருளாதார மந்தநிலை என பல்வேறு காரணங்களால் தொழிற்துறையினர் கடும் பாதிப்பை அடைந்து வருகின்றனர். கொரோனா வைரசால் தொழில் துறையினரின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே வராக்கடன்கள் அதிகரித்து வருவதால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடன் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தொழில்துறையினருக்கு நிதி ஆதாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.