மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு

மலேசியா : மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர். சுற்றுலா சென்ற 100 பேரும், பணி நிமித்தமாக சென்ற 100க்கும் மேற்பட்டோரும் நாடு திரும்ப முடியாமல் உணவு கிடைக்காமல் அல்லல் படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை விடுத்து வருகின்றனர்.முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories: