வாஷிங்டன்: கொரோனாவுக்கு உரிய மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளிலும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா தடுப்புக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜப்பான் நாட்டு தயாரிப்பான favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை குணப்படுத்த உரிய மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் ஆய்வாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா வைரஸ் தடுப்புக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் அனுமதியளித்திருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து அதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.