சென்னை: கொரோனா எதிரொலி காரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவை தள்ளி வைப்பதாக கோயில் இணை ஆணையர் காவேரி தெரிவித்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 29ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் ஏப்ரல் 4ம் தேதியும், அறுபத்து மூவர் திருவிழா ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்று அதில் கூறப்பட்டு இருப்பது. தொடர்ந்து 10 நாட்கள் இவ்விழாவை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வந்தது.