சென்னை : கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் 21 சோதனைச் சாவடிகளிலும் பரிசோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.