டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதோ அல்லது தனியாருக்கு விற்கும் என்னமோ மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதனை கூறியிருக்கிறார். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் தற்போதைய எண்ணிக்கை எத்தனை என்று திமுக உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை விற்கப்போவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அரசு அச்சத்தை உருவாக்கியத்தினாலேயே ஏராளமானோர் வேறு சேவை நிறுவனங்களுக்கு மாறியதாக தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மக்களவையில் தயாநிதிமாறன் தெரிவித்ததாவது, நீங்கள் உற்பத்தி செலவு 23 சதவீதம் வரை குறைந்துவிட்டது என்கிறீர்கள். அப்படியானால் செயல்பாட்டு லாபத்தை அதிகரிக்கப்போகிறீர்களா? என சாடினார்.