திருமலை: தெலங்கானாவில் லாரி மீது பஸ் மோதியதில் 7 பெண்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தெலங்கானாவின் பசலவடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் எடுப்பயலாவில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேதக்கில் இருந்து சங்காரெட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சங்கய்யபேட்டை என்ற இடத்தில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் வந்தவர்களில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.