புதுடெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், வோடபோன், டிஎச்எப்எல், எஸ்ஸெல், ஐஎல்எப்எஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது. இதன் மூலம் ராணா கபூர், அவரது குடும்பத்தினர், 4,300 கோடி மறைமுகமாக ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.