பணகுடி: பணகுடியில் இரவு நேரங்களில் நீரோடைகளில் மணல் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் குத்திரபாஞ்சான், களக்காடு செல்லும் சாலையில் உள்ள ஓடைகள், ராஜபுதூர் செல்லும் ஓடைகள், பணகுடி கன்னிமார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சில அதிகாரிகள் துணையுடன் மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் திருவிழா மற்றும் கொடைவிழக்களில் பாதுகாப்பு பணிக்கு ஒருசில நேர்மையான அதிகாரிகள் செல்லும் நிலையில் அவர் எந்த பகுதியில் பணியில் இருக்கிறார்? என அவருக்கு கீழ் பணிபுரியும் ஆட்கள் முலம் தெரிந்து கொண்டு அன்றைய இரவு முழுவதும் மணல் வேட்டை நடக்கிறது.