திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற முள்ளாச்சி மாரியம்மன் கோயில் 76ம் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஒவ்வொறு நாளும் உபயதாரர்கள் சார்பில் தினமும் தனி தனி வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான நேற்று அதிகாலை முதல் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், காணிக்கை செலுத்துதல், முடி இறக்குதல் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்றது. மாலை நேர்த்திக்கடன் நிறைவேற்ற பக்தர்கள் தீமிதித்தனர். நகர முழுவதும் பல இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மோர், சர்பத் வழங்கப்பட்டது. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.