திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட மிகவும் குறைவாக காணப்பட்டது. இதனால் ₹300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்குள்ளும், ஆதார் மூலம் சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களும் இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.