ஜோலார்பேட்டை: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் வனவிலங்குகளின் தாகத்தை தொட்டிகளில் தீர்க்க சமூக ஆர்வலர்கள் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். ஜோலார்பேட்டையில் உள்ள கோடியூர் பாதர்கெசு ரோடு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ராஜா. இவர் தின்பண்டம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி பகவத் இவரும் இதே தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி ராஜா மகள் தென்றல் உட்பட இவர்கள் அனைவரும் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் உள்ள குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் தாகத்தை தீர்க்க கடந்த 4 ஆண்டுகளாக வாரத்திற்கு ஒரு நாள் கேன்களில் தண்ணீரை எடுத்துச்சென்று சாலையோரம் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்பி குரங்குகள், பறவைகள் போன்றவற்றின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.