வேலூர்: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மற்ற உள்ள நகரப்புற பகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி நகர்ப்புற தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. தற்போது நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடக்கம்: அதிகாரிகள் தகவல்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு: அதிகாரப்பூர்வ தகவல்
- அதிகாரிகள் தகவல்