நாகர்கோவில்: திருநெல்வேலி ஆசிரியர் காலனி பகுதியில் வசித்து வருபவர் வினோதினி (28). வங்கி மேலாளர். இவர் நேற்று காலை, குமரி மாவட்ட எஸ்.பி.யிடம், ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நானும், குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஏசுதாஸ் (38) என்பவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களின் காதல் விவகாரம், எனது பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் சாதி மற்றும் கவுரவம் கருதி எனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்தில் கடந்த 22.1.2020ல் நானும், ஏசுதாசும் பதிவு திருமணம் ெசய்து கொண்டு வாழ்ந்து வந்தோம்.