தூத்துக்குடி: கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைதான 15 இலங்கை மீனவர்களை, கொரோனா வைரஸ் பீதியால் மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.கன்னியாகுமரி அருகே இந்திய கடலோர காவல்படையினர் அபிராஜ் என்ற கப்பலில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள், 3 இலங்கை படகுகள் அத்துமீறி நுழைந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து 3 படகுகளையும் கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அவற்றில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 15 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 படகுடன் நேற்று காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.