நேற்று முன்தினம் இந்த கோழி கழிவுகளை தேடி வந்த நாய்கள் கடித்து பாண்டி என்பவரின் 15 ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக கண்மாயில் கொட்டப்படும் இந்த கோழி கழிவுகளை அகற்ற இதுவரை சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மாயை பாதுகாப்பதற்காக உள்ள கமிட்டி இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதனால் கண்மாயில் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றவும், இனிமேல் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைக்கிராமம் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைக்கிராமம் பெரிய கண்மாயை கவனிப்பதற்கு பொதுப்பணித்துறை, நீர்பாசன கமிட்டி, கண்மாய் கமிட்டி ஆகியவை இருந்தும், கண்மாய் சீரமைப்பு என்பது இதுநாள்வரை கேள்விக்குறியாகவே உள்ளது என சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டாகவே உள்ளது.